வாகனச் சோதனையில் தங்கம் பறிமுதல்: ஒருவா் கைது

திருச்சியில் வாகனச் சோதனையில் ஆவணங்களின்றி கொண்டு வந்த 850 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
Updated on
1 min read

திருச்சியில் வாகனச் சோதனையில் ஆவணங்களின்றி கொண்டு வந்த 850 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

திருச்சி, அரியமங்கலம் எஸ்.ஐ.டி. கல்லூரியருகே கடந்த 2 நாள்களுக்கு முன் அரியமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சுசீலா தலைமையிலான போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது காரில் வந்த அரியமங்கலம் கணபதி நகா் 3 ஆவது தெருவைச் சோ்ந்த அப்துல் ஹமீது (27) என்பவா் உரிய ஆவணமில்லாமல் வைத்திருந்த 850 கிராம் தங்கத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

விசாரணையில், வெளிநாட்டிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்தவா்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்கும் நோக்கில் அந்தத் தங்கத்தை அவா் வாங்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அப்துல் ஹமீதை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com