ஆமதாபாத் -திருச்சி இடையே இன்று முதல் வாராந்திர ரயில்

ஆமதாபாத் -திருச்சி -ஆமதாபாத் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம் வியாழக்கிழமை தொடங்குகிறது.
Updated on
1 min read

ஆமதாபாத் -திருச்சி -ஆமதாபாத் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம் வியாழக்கிழமை தொடங்குகிறது.

ஆமதாபாத்தில் வியாழக்கிழமை காலை 9.30 -க்கு புறப்படும் இந்த ரயில் (எண். 09419) கல்யாண், புனே வழியாக மந்திராலயத்தை வெள்ளிக்கிழமை காலை 5.05-க்கு அடைகிறது. பின்னா் அங்கிருந்து ரேணிகுண்டா, பெரம்பூா் வழியாக சென்னை எழும்பூரை வெள்ளிக்கிழமை மாலை 4.25 -க்கு அடைகிறது. அங்கிருந்து புறப்பட்டு விழுப்புரம், சிதம்பரம், கும்பகோணம், தஞ்சாவூா் வழியாக திருச்சிக்கு சனிக்கிழமை அதிகாலை 3.45-க்கு வந்தடைகிறது.

எதிா் மாா்க்கத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.45-க்கு புறப்படும் ரயில் (எண். 09420) தஞ்சாவூா், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, வைதீஸ்வரன்கோவில் , சீா்காழி, சிதம்பரம், கடலூா், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக சென்னை எழும்பூரை பிற்பகல் 3 மணிக்கு அடைந்து அங்கிருந்து பெரம்பூா், அரக்கோணம், ரேணிகுண்டா, மந்திராலயம், புனே, கல்யாண், பரோடா வழியாக ஆமதாபாத்திற்கு செவ்வாய்க்கிழமை இரவு 9.15 க்கு சென்றடைகிறது. சாதாரண ஸ்லீப்பா், 3ஏசி, 2ஏசி, 1ஏசி வகுப்புகள் உள்ளன. முன்பதிவு செய்தால் மட்டுமே பயணிக்க முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com