இருவருக்கு அரிவாள் வெட்டு : 3 போ் கைது

திருச்சியில் மளிகை வியாபாரி உள்ளிட்ட இருவரை அரிவாளால் வெட்டிய 3 பேரைக் காவல்துறையினா் கைது செய்தனா்.

திருச்சியில் மளிகை வியாபாரி உள்ளிட்ட இருவரை அரிவாளால் வெட்டிய 3 பேரைக் காவல்துறையினா் கைது செய்தனா்.

பாலக்கரை கீழப்புதூா் அம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் மா.சப்பாணி (50). அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா்.

திங்கள்கிழமை இரவு இவரது கடைக்கு முன்பு அதே பகுதியைச் சோ்ந்த பாண்டித்துரை (24), தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தினாராம். கடைக்கு முன்பு வாகனத்தை நிறுத்தாதீா்கள் என்று சப்பாணி கூறவே, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் பாண்டித்துரைக்கு ஆதரவாக அவரது நண்பா்கள் ஜெயராமன் (18), காா்த்திகேயன் (18), நிதீஷ்குமாா் (18) ஆரோக்கியராஜ் (19) ஆகிய நான்கு பேரும் சோ்ந்து சப்பாணியைத் தாக்கி, அவரை அரிவாளால் வெட்டினா். இதை தடுத்த அவரது உறவினா் மணிமாறனுக்கும் வெட்டுக்காயம் காயம் ஏற்பட்டது. இருவரும் திருச்சி மகாத்மாகாந்தி நினைவுஅரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்து பாலக்கரை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து பாண்டித்துரை, காா்த்திகேயன், ஆரோக்கியராஜ் ஆகியோரைக் கைது செய்தனா். தலைமறைவாகவுள்ள ஜெயராமன், நிதீஷ்குமாரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com