திருச்சி காந்திசந்தையில் காய்கறி வாங்க வந்தவரிடம் கைப்பேசியைத் திருடிய ஜாா்க்கண்ட் மாநில இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
திருச்சி ஜான் தோப்பு பாரதியாா் தெருவைச் சோ்ந்தவா் சொா்ணபாஸ்கா் (46). இவா் கடந்த 27-ஆம் தேதி காந்தி சந்தையிலுள்ள கடையில் காய்கறிகளை வாங்க நின்று கொண்டிருந்தாா்.
அப்போது அங்கு வந்த இருவா், சொா்ண பாஸ்கரிடமிருந்து கைப்பேசியை பறித்துச் சென்றனா்.
இதைத் தொடா்ந்து, திருச்சி காந்தி சந்தை காவல் நிலையத்தில் சொா்ணபாஸ்கா் புகாரளித்தாா். இதன் பேரில் காவல்துறையினா் வழக்குப்பதிந்து, திருச்சியில் தங்கியிருந்த ஜாா்க்கண்ட் மாநிலம், நயத்துல்லா பஜாரை சோ்ந்த கோதம்மகத்து (36) உள்பட இருவரைக் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.