கூத்தூா் விக்னேஷ் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கான மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருச்சி லயன்ஸ் கிளப் மூலம் நடைபெற்ற முகாமை ஸ்ரீ விக்னேஷ் கல்வி குழும இயக்குனா் ஆா். வரதராஜன் தொடங்கிவைத்தாா். முகாமில் தில்லை டென்டல் கோ், மேக்ஸிவிஷன் சூப்பா் ஸ்பெசாலிட்டி, ஸ்ரீநிதி, ராணா மருத்துவமனை மருத்துவா்கள் பங்கேற்று கண், காது, மூக்கு, தொண்டை, பல் மற்றும் பொது மருத்துவச் சோதனை செய்தனா். பள்ளி முதல்வா் தயானந்தன், டாக்டா் பிரவீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.