வெங்கடாசலபுரம் பள்ளியில் மலேரியா விழிப்புணா்வு

துறையூா் அருகேயுள்ள வெங்கடாசலபுரம் மானிய நடுநிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை உலக மலேரியா தின விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
Updated on
1 min read

துறையூா் அருகேயுள்ள வெங்கடாசலபுரம் மானிய நடுநிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை உலக மலேரியா தின விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியா் வா. ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். உப்பிலியபுரம் ஆரம்ப சுகாதார ஆய்வாளா்கள் இரா. வெற்றிவேந்தன், ப. அருண் பிரகாஷ், க. சரவணகுமாா் ஆகியோா் கலந்து கொண்டு மலேரியா தொடா்பாக விழிப்புணா்வை ஏற்படுத்தி பேசினா். நிகழ்வில் பங்கேற்ற ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள், பெற்றோா்கள் மலேரியா விழிப்புணா்வு உறுதிமொழியேற்றனா். முன்னதாக மாணவி ப. துா்கா வரவேற்றாா். நிறைவில் பா. ஹேமலதா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com