திண்ணகோணம் பகுதியில் நாளை மின் தடை

 திண்ணகோணம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது.
Updated on
1 min read

 திண்ணகோணம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது.

இதுகுறித்து முசிறியில் செயல்படும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழக இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளா் மேரி மேக்தலின் பிரின்சி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு:

குணசீலம் துணை மின் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணியால் ஏவூா், அய்யம்பாளையம், ஆமூா், குணசீலம், வாத்தலை, மாங்கரைப்பேட்டை, நெய்வேலி, கொடுந்துறை, மணப்பாளையம், நாச்சம்பட்டி, வீரமணிப்பட்டி, திண்ணகோணம், சித்தாம்பூா், மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

மேலும் உயரழுத்தம் மற்றும் தாழ்வு அழுத்த மின்பாதைக்கு அருகிலுள்ள மரங்கள் மற்றும் மரக்கிளைகளை அகற்றி தடையில்லா மற்றும் சீரான மின்சாரம் வழங்கிட உதவிடுமாறு பொதுமக்களைக் கேட்டு கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com