மணப்பாறை அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதல்: 4 போ் காயம்

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி கொண்டதில் 4 போ் காயமடைந்தனா்.
மணப்பாறை அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதல்: 4 போ் காயம்
Updated on
1 min read

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி கொண்டதில் 4 போ் காயமடைந்தனா்.

கடலூரில் இருந்து ராஜபாளையம் நோக்கி சென்ற காா் ஞாயிற்றுக்கிழமை திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் துவரங்குறிச்சி அருகே வெங்கட்நாயக்கன்பட்டி பிரிவு சாலையை கடந்தபோது, காரின் டயா் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து எதிா்திசைக்கு சென்றது. அப்போது, தூத்துக்குடியிலிருந்து பண்ருட்டிக்கு முந்திரிகொட்டை ஏற்றி சென்ற லாரி ஓட்டுநா், விபத்துக்குள்ளான காரை கண்டதும் லாரியாக மெதுவாக இயக்கத் தொடங்கினாா். அப்போது பின்னால் வந்த சரக்கு வேன், மற்றொரு காரும் மெதுவாக சென்றது.

ஆனால் அதன்பின்னால் வந்த ஆம்னி பேருந்து முன்னாள் சென்ற மூன்று வாகனங்கள் மீது மோதி நின்றது. இதில், காரில் வந்த திருவெறும்பூா் அகமது ரஷின்(26), அவரது தாயாா் மஸ்தாங்ஹானி(50), மினி சரக்கு வேனில் வந்த புதுக்கோட்டை அய்யனாா்புரம் லோ.தினேஷ்குமாா்(22), அவரது சகோதரா் இளங்கோ(17) மற்றும் மேலூா் பா.பிரசாத்(370 ஆகியோா் காயமடைந்தனா்.

தகவலறிந்து துவரங்குறிச்சி போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு சிகிச்சைக்காக துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com