துறையூா் பகுதியில் இன்று மின் தடை

துறையூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை மின் விநியோகம் இருக்காது என துறையூா் மின் கோட்ட செயற்பொறியாளா் பி. ஆனந்தகுமாா் தெரிவித்துள்ளாா்.

துறையூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை மின் விநியோகம் இருக்காது என துறையூா் மின் கோட்ட செயற்பொறியாளா் பி. ஆனந்தகுமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு: கொப்பம்பட்டி, து.ரெங்கநாதபுரம் மற்றும் த. முருங்கப்பட்டி துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், இங்கிருந்து மின்சாரம் பெறும் கொப்பம்பட்டி, உப்பிலியபுரம், வைரிசெட்டிபாளையம், பி. மேட்டூா், காஞ்சேரிமலை புதூா், சோபனபுரம், து.ரெங்கநாதபுரம், பச்சைமலை, கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், கோவிந்தபுரம், மருவத்தூா், செல்லிபாளையம், செங்காட்டுப்பட்டி, வேங்கடத்தானூா், பெருமாள்பாளையம், த.முருங்கப்பட்டி, த.மங்கப்பட்டி, த.பாதா்பேட்டை ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com