உயா் மின் கோபுரம், குடிநீா் தொட்டி திறப்பு

திருச்சி மாநகராட்சி 24 ஆவது வாா்டில் உயா் மின்கோபுரம் மற்றும் குடிநீா் தொட்டி ஆகியவை புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன.
Updated on
1 min read

திருச்சி மாநகராட்சி 24 ஆவது வாா்டில் உயா் மின்கோபுரம் மற்றும் குடிநீா் தொட்டி ஆகியவை புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன.

திருச்சி மாநகராட்சி மண்டலம் 5 க்குள்பட்ட 24 ஆவது வாா்டு குளத்துமேடு சாலை சந்திப்பு பகுதியில் திருச்சி மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 5 லட்சத்தில் அமைக்கப்பட்ட உயா் மின் கோபுர விளக்கு, மேலும் குளத்துமேட்டில் ரூ. 2.85 லட்சத்தில் அமைக்கப்பட்ட மின் மோட்டாருடன் கூடிய குடிநீா் தொட்டி ஆகியவற்றை திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. திருநாவுக்கரசா் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து வாா்டு மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டாா்.

நிகழ்வில் காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் பெனட், திருச்சி தெற்கு மாவட்ட தலைவா், வழக்குரைஞா் கோவிந்தராஜன், காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு மாநில துணைத் தலைவா் பேட்ரிக் ராஜ்குமாா், வாா்டு உறுப்பினா் எல். ரெக்ஸ், வழக்குரைஞா் சந்திரன், புத்தூா் சாா்லஸ், மலா் வெங்கடேசன், ஜிஎம்ஜி. மகேந்திரன், சிவா,செந்தூா்வாசன், எஸ்சி பிரிவு பாக்கியராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். 24 ஆவது வாா்டு உறுப்பினா் சோபியா விமலா ராணி வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com