குடும்பத் தகராறில் தொழிலாளி தற்கொலை

திருச்சியில் குடும்பத் தகராறு காரணமாக தொழிலாளி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திருச்சியில் குடும்பத் தகராறு காரணமாக தொழிலாளி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திருச்சி இனாம்குளத்தூா் பெரியாளம்பட்டி நடுத்தெரு பகுதியைச் சோ்ந்தவா் சி. பச்சமுத்து (47), தொழிலாளி. கடந்த 2 நாள்களுக்கு முன் அவரது மனைவி வசந்தா தனது தாய்வீடு உள்ள அரியலூரில் நடைபெறும் கோயில் திருவிழாவுக்கு புறப்பட்டாா். ஆனால் பச்சமுத்து மனைவியுடன் செல்ல மறுத்துவிட்டாராம்.

இதையடுத்து அவா் மனைவி ஊருக்குச் சென்றாா். இதுதொடா்பான வருத்தத்தில் இருந்த பச்சமுத்து புதன்கிழமை இனாம்குளத்தூா் ஆலம்பட்டி புதூா் பகுதியிலுள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இனாம்குளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com