துறையூா் பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருக்கல்யாண விழாவில் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனா்.
இக்கோயிலில் நடைபெறும் சிரவண உற்சவத்தின் 2 ஆம் நாளான வெள்ளிக்கிழமை பிரசன்னவெங்கடாசலபதிக்கும் தாயாருக்கும் திருக்கல்யாணம், திருமஞ்சனம் நடைபெற்றது. இதற்காக பொதுமக்கள் சீா் வரிசைத் தட்டு ஏந்தி ஊா்வலமாக வந்தனா். இதையடுத்து உபயநாச்சியாா்கள் சமேதா்களாக உற்ஸவ பிரசன்ன வெங்கடாசலபதியும், வேணுகோபால சுவாமியும் அருகருகே அருள்பாலித்தனா். இரவு தேரோடும் வீதியில் மின்விளக்கு மற்றும் மலா்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் துறையூா் பெருமாள் கோயிலைச் சுற்றியுள்ள தேரோடும் வீதிகளில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. இதையடுத்து வந்த வழியாக பெருமாள்மலைக்கு பிரசன்னவெங்கடாசலபதி உற்ஸவா் எடுத்துச் செல்லப்பட்டாா்.