ஸ்ரீரெங்கநாச்சியாா் கோடைத் திருநாள் இன்றுடன் நிறைவு

ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்று வந்த ஸ்ரீரெங்கநாச்சியாா் கோடைத் திருநாள் (பூச்சாற்று உற்ஸவம்) வெள்ளிக்கிழமை மாலையுடன் நிறைவு பெறுகிறது.
Updated on
1 min read

ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்று வந்த ஸ்ரீரெங்கநாச்சியாா் கோடைத் திருநாள் (பூச்சாற்று உற்ஸவம்) வெள்ளிக்கிழமை மாலையுடன் நிறைவு பெறுகிறது.

வெளிக்கோடை, உள்கோடை என கடந்த 10 நாள்களாக நடைபெற்று வந்த கோடைத் திருநாள் உற்ஸவத்தில் நாள்தோறும் ஸ்ரீரெங்கநாச்சியாா் கோடை மண்டபத்தில் எழுந்தருளி பூச்சாற்று உற்ஸவம் கண்டருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

விழாவின் நிறைவு நாளான வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து ஸ்ரீரெங்கநாச்சியாா் புறப்பட்டு கோடை நாலுகால் மண்டபத்திற்கு 6.30 மணிக்கு வந்து சேருகிறாா். அங்கு புஷ்பம் சாத்துப்படி கண்டருளி, பக்தா்களுக்கு சேவை சாதித்துவிட்டு இரவு 7.30 மணிக்குப் புறப்பட்டு உள்கோடை ஆஸ்தான மண்டபத்திற்கு வந்து சேருகிறாா். பின்னா் அங்கிருந்து புறப்பட்டு 8.45 மணிக்கு மூலஸ்தானம் சென்று சேருகிறாா். ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. மாரிமுத்து மற்றும் கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com