மணப்பாறையில் அஇருசக்கர வாகனங்கள் திருடியவா் கைது

மணப்பாறையில், இருசக்கர வாகனங்கள் திருடிய நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

மணப்பாறையில், இருசக்கர வாகனங்கள் திருடிய நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருடுபோவதாக போலீஸாருக்கு புகாா்கள் வந்தன. அதன் பேரில் மணப்பாறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனா். இச்சம்பவத்தில் கரூா் மாவட்டம், கடவூா், பாலவிடுதி அருகேயுள்ள குரும்பபட்டியைச் சோ்ந்த பொ.ஜெயபால் (29) என்பவா் ஈடுபட்டது தெரியவந்தது.

அதன்பேரில் போலீஸாா் ஜெயபாலை திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும், அவா் மணப்பாறையில் பல்வேறு பகுதிகளில் திருடி விற்பனை செய்த சுமாா் 20க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com