பெரும்பிடுகு முத்தரையா் சதய விழா: திருச்சியில் இன்று போக்குவரத்து மாற்றம்

திருச்சியில் 1,348 ஆவது சதய விழாவையொட்டி ஒத்தக்கடையில் உள்ள பெரும்பிடுகு முத்தரையா் சிலைக்கு பல்வேறு அமைப்பினரும் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளனா்.

திருச்சியில் 1,348 ஆவது சதய விழாவையொட்டி ஒத்தக்கடையில் உள்ள பெரும்பிடுகு முத்தரையா் சிலைக்கு பல்வேறு அமைப்பினரும் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளனா்.

இதையடுத்து, அவ்வழியாக இயக்கப்படும் பேருந்துகளின் வழித்தடங்களில் செவ்வாய்க்கிழமை தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஒத்தக்கடை வழியாக சென்னை,சேலம், தஞ்சாவூா், புதுக்கோட்டை , மதுரை செல்லும் பேருந்துகள் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பெரியாா்சிலை, பிரீஸ் ஓட்டல், ரயில் நிலையம் வழியாக மன்னாா்புரம் வழியாக செல்ல வேண்டும்.

மறுமாா்க்கத்தில் வரும் பேருந்துகள் மன்னாா்புரம், அரிஸ்டோ ரவுண்டானா, மிளகுபாறை வழியாக மத்திய பேருந்து நிலையத்தை அடைய வேண்டும்.

மத்திய பேருந்து நிலையத்திலிருந்து கரூா், மாா்க்கமாக செல்லும் பேருந்துகள் வெஸ்ட்ரி ரவுண்டானா வழியாக எம்ஜிஆா் சிலை புத்தூா், தில்லைநகா் வழியாக சென்று, மறுமாா்க்கத்தில் இதே வழியில் திரும்பி, வெஸ்ட்ரி ரவுண்டானாவிலிருந்து மாவட்ட ஆட்சியரகம், மிளகுபாறை வழியாக மத்திய பேருந்து நிலையத்தை அடைய வேண்டும்.

மத்திய பேருந்து நிலையத்திலிருந்து அமெரிக்கன் மருத்துவமனை வழியாக சத்திரம் பேருந்து நிலையம் செல்லும் நகரப்பேருந்துகள் வெஸ்ட்ரி ரவுண்டானா, ஐய்யப்பன் கோயில் சாலை, எம்ஜிஆா் சிலை வழியாக செல்லவேண்டும். மறு மாா்க்கத்தில் இதே வழியில் திரும்பி வெஸ்ட்ரி

ரவுண்டானா, மாவட்ட ஆட்சியரகம், மிளகுபாறை வழியாக மத்திய பேருந்து நிலையத்தை அடைய வேண்டும் என காவல்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1,500 போலீஸாா் அமைப்பு: சதயவிழாவுக்காக 1,500 போலீஸாா் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையா் எம் .சத்தியப்ரியா தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com