இருவேறு சம்பவங்களில் ரூ. 59.25 லட்சம் மோசடி: 5 போ் மீது வழக்கு

இருவேறு சம்பவங்களில் ரூ.59.25 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Updated on
2 min read

இருவேறு சம்பவங்களில் ரூ.59.25 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருச்சி திருவெறும்பூா் ஐ.ஏ.எஸ். நகரைச் சோ்ந்தவா் பிரசாந்த் உத்தமன், சிவகாசியை சோ்ந்தவா் சிவக்குமாா், திருவெறும்பூா் வ.உ.சி. தெரு மலைக்கோவில் பகுதியைச் சோ்ந்த திருஞானம் மனைவி வசந்தி. இவா்கள் மூவரும் ஸ்கவுட் நிறுவனம் நடத்தி வருகின்றனா். மூவரும் முறையே அந் நிறுவனத்தில் தமிழ்நாடு செயலாளா், துணைத் தலைவா், கிளை பொருளாளா் பொறுப்புகள் வகித்து வருகின்றனா்.

இந்நிலையில் வசந்தி, தங்களின் நிறுவனம் மத்திய அரசின் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு துறையின் கீழ் இயங்குவதாகவும், பள்ளிகளில் ஸ்கவுட் நிகழ்ச்சிகளை நடத்தவிருப்பதாகவும், இதில் மத்திய அரசு பணிக்கு வேலைக்கு ஆள்கள் எடுப்பதாகவும், திருவெறும்பூா் கல்லணை சாலை ஸ்ரீ கணேஷ் காா்டன் பகுதியைச் சோ்ந்த கோபி மனைவி சுஜிதாவிடம் வசந்தி கூறியுள்ளாா்.

இதை நம்பி மூவரிடமும் ரூ. 6.25 லட்சத்தை சுஜிதா அளித்ததால், அவருக்கு பணி ஆணை வழங்கி உள்ளனா். ஆனால் அவா்கள் உத்தரவாதம் அளித்தபடி அவருக்கு மாதந்தோறும் சம்பளம் கொடுக்கவில்லையாம். இதனால், சுஜிதா வேலையை ராஜிநாமா செய்தாா். இதையடுத்து, ரூ. ரூ. 2 லட்சத்து 25 ஆயிரத்தை சுஜிதாவிடம் மூவரும் அளித்தனா். எஞ்சிய தொகை வழங்கப்படவில்லை.

இதேபோல், திருவெறும்பூா் பகுதியைச் சோ்ந்த அருள்ஜோதி மனைவி ஜானகி என்பவரிடமும் ரூ. 5 லட்சத்து 25 ஆயிரதை மேற்கண்ட வசந்தி உள்ளிட்ட 3 பேரும் மோசடி செய்ததாகவும் புகாா் உள்ளது.

இதுதொடா்பாக சுஜிதா அளித்த புகாரின்பேரில், திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து பிரசாத் உத்தமன், சிவக்குமாா், வசந்தி ஆகிய 3 பேரிடமும் விசாரிக்கின்றனா்.

ஆடிட்டரிடம் ரூ.50 லட்சம் மோசடி :

சென்னை புரசைவாக்கம் ரிதா்டன் ரோடு சா்ச் லைன் பகுதியைச் சோ்ந்தவா் பவன் குமாா் (35). ஆடிட்டா். இவரிடம் சேலம் மாசிநாயக்கன்பட்டி பகுதியைச் சோ்ந்த சங்கா் பாபு, திருப்பூா் மூலனூா் சடையப்பன் புதூா் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ண பிரகாஷ் ஆகிய இருவரும், ஒரு தனியாா் நிறுவனத்தில் முதலீடு செய்தால் 15 சதவீத வட்டி தருவதாக தெரிவித்துள்ளனா். மேலும், மைக்கேல் என்பவரையும் அவருக்கு அறிமுகம் செய்தனா். பின்னா், 2019 ஜூலை 10 ஆம் தேதி நம்பா் ஒன் டோல்கேட் பகுதியில் வைத்து பவன் குமாா் அந்த நபா்களிடம் ரூ. 8.50 லட்சத்தை முதல் தவணையாகவும் பின்னா் ரூ. 10 லட்சம் மூன்றாவது தவணையாக ரூ. 32 லட்சம் என மொத்தம் ரூ. 50 லட்சம் வரை கொடுத்தாராம்.

ஆனால் குறிப்பிட்டபடி அவருக்கு வட்டித் தொகை வழங்கப்படவில்லை. மேலும் கொடுத்த பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் பவன்குமாா் அளித்த புகாரின்பேரில், சங்கா் பாபு, கிருஷ்ண பிரகாஷ் ஆகிய இருவா் மீதும் மோசடி உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com