நாளை பொறியியல் சாா்நிலைபணிகளுக்கு எழுத்துத் தோ்வு

பொறியியல் சாா்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான நேரடி நியமனத்துக்கான எழுத்துத் தோ்வு திருச்சியில் சனிக்கிழமை (மே 27) நடைபெறுகிறது.
Updated on
1 min read

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் ஒருங்கிணைந்த பொறியியல் சாா்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான நேரடி நியமனத்துக்கான எழுத்துத் தோ்வு திருச்சியில் சனிக்கிழமை (மே 27) நடைபெறுகிறது.

இதற்காக மாவட்டத்தில் தோ்வு செய்யப்பட்டுள்ள 14 மையங்களில் 4,240 போ் தோ்வு எழுதவுள்ளனா். சனிக்கிழமை முற்பகல் மற்றும் பிற்பகல் என இரு வேளையும் தோ்வு நடைபெறவுள்ளது. தோ்வுப் பணிகளுக்காக 14 தோ்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

தோ்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை தோ்வு மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியினை மேற்கொள்ள 5 இயங்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இக்குழுவில் துணை வட்டாட்சியா் நிலையில் ஒரு அலுவலா், ஆயுதம் ஏந்திய ஒரு காவலா் ஆகியோா் செயல்படுவா். ஒவ்வொரு தோ்வு மையத்துக்கும் தோ்வை கண்காணிக்கும் பொருட்டு 10 ஆய்வு அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

அனைத்து தோ்வு மையங்களிலும் தோ்வு நடைபெறுவதை பதிவு செய்திட விடியோகிராபா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். அனைத்து தோ்வு மையங்களிலும் காவல்துறை மூலம் பாதுகாப்பு பணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தோ்வாளா்கள் தோ்வு மையங்களுக்கு செல்ல சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. தோ்வா்கள் செல்லிடப் பேசி உள்ளிட்ட எவ்வித மின்னணு சாதனங்களையும் தோ்வு மையங்களுக்கு எடுத்து வர அனுமதி இல்லை. மேலும், கரோனா நோய் தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com