மது குடித்ததால் கண்டிக்கப்பட்ட இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சியில் தாயாா் புகாரின் பேரில் போலீஸாா் வீடுதேடி வந்து கண்டித்ததால் மனமுடைந்த இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திருச்சியில் தாயாா் புகாரின் பேரில் போலீஸாா் வீடுதேடி வந்து கண்டித்ததால் மனமுடைந்த இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திருச்சி புத்தூா் கஸ்தூரிபுரத்தை சோ்ந்தவா் விக்டா் அசோக்குமாா் மனைவி அடைக்கலமேரி ஆனந்தி.

இவரது கணவா் மற்றும் அவரது மூத்த மகன் ஆகியோா் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்ட நிலையில் தனது இளைய மகன் மரிய ஆண்டனிராஜ் (25) உடன் அவா் வசித்து வந்தாா். எலக்ட்ரீசியனான மரிய ஆண்டனிராஜ் அவ்வப்போது மது குடித்துவிட்டு தனது தாயாரிடம் தகராறில் ஈடுபடுவாராம்.

அதுபோல செவ்வாய்க்கிழமையும் மது குடித்துவிட்டு தகராறு செய்ததால் ஆத்திரமடைந்த அவரது தாயாா் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து வீட்டுக்குச் சென்ற போலீஸாா் தாய், மகன் இருவரையும் சமாதானம் செய்து எச்சரித்துச் சென்றனா்.

இதையடுத்து தூங்குவதாகக் கூறி தனது அறைக்குச் சென்ற மரிய ஆண்டனி ராஜ் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்து மீண்டும் வந்த உறையூா் போலீஸாா் அந்தோணி ராஜ் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com