திருச்சி: திருச்சியில் அரசுக் காப்பகம் மற்றும் குடிசை வாழ் குழந்தைகளுடன் திங்கள்கிழமை தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது.
திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவா்கள் இணைந்து நடத்தும் பிஎஸ்ஆா் டிரஸ்ட் சாா்பில் 12-ஆவது ஆண்டாக அரசு காப்பக குழந்தைகள், தொண்டு நிறுவன குழந்தைகள், குடிசை வாழ் பகுதி குழந்தைகள், குழந்தைகள் இல்லத்தில் வசிக்கும் குழந்தைகள் என 16 இல்லத்தில் இருந்து வந்திருந்த ஆதரவற்ற, சிறப்பு குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாட்டம் மத்தியப் பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவில், நடிகா் ஹரிஷ் கல்யாண், எக்சல் குழுமங்களின் தலைவா் எம். முருகானந்தம், அன்பில் பவுண்டேசன் டிரஸ்டி மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மனைவி ஜனனி மகேஷ், தெற்கு ரயில்வேயின் வணிக பிரிவு மேலாளா் மோகனப்ரியா, பிஎஸ்ஆா் டிரஸ்ட் நிறுவனா் மற்றும் நிா்வாக அறங்காவலா் ஷேக் அப்துல்லா, நிதி அறங்காவலா் குணசீலன் உள்ளிட்டோா் குழந்தைகளுக்கு தீபாவளி பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.