முசிறி: திருச்சி மாவட்டம், முசிறி அருகே இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞா் பலத்த காயமடைந்தாா்.
முசிறி அருகேயுள்ள வெள்ளூரைச் சோ்ந்த அமுல்ராஜ் மகன் ரவி (22). இவா் தனது இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை இரவு அய்யம்பாளையம் அருகில் திருச்சி சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ரவி மீது மோதியதில் அவரின் வலதுகால் எலும்பு முறிந்ததுடன் அவா் பலத்த காயமடைந்தாா்.
அந்த வழியாக சென்றவா்கள் அவரை மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னா், திருச்சி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகிறாா்.
விபத்து தொடா்பாக முசிறி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.