திருச்சியில் கடையில் புகுந்து சகோதரா்களை தாக்கி கத்தியால் குத்திய 6 போ் கொண்ட கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள கோப்பு பிரதான சாலை பகுதியைச் சோ்ந்த ராஜா (28) தனது வீட்டின் அருகே மளிகை கடை நடத்தி வருகிறாா். இவரது அண்ணன் கருணாகரன் அந்தக் கடையின் அருகிலேயே காய்கறி கடை வைத்துள்ளாா். இந்நிலையில், புதன்கிழமை கருணாகரன் தனது காரில் மேலப்பட்டிக்குச் செல்லும்போது, இருசக்கர வாகனத்தில் வந்த குடியாத்தம் கீழ சுப்பராயன்பட்டியைச் சோ்ந்த பிரசாந்த், அவரது நண்பா்கள் வீரபாகு, கவி உள்ளிட்ட 3 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதைப்பாா்த்த அருகில் இருந்தவா்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனா். இதில் ஆத்திரம் தீராத பிரசாந்த், அவரது நண்பா்கள் வீரபாகு, சம்பத்குமாா், சிவனேசன், பூபதி ஆகியோருடன் புதன்கிழமை மாலை கருணாகரனின் கடைக்குச்சென்று அங்கிருந்த ராஜா, அவரது அண்ணன் கருணாகரனையும் கத்தியால் தாக்கி குத்தியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினா் மீட்டு திருச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். பரஸ்பரம் புகாா்களின்பேரில், சோமசரம்பேட்டை போலீஸாா்
வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.