திருச்சி: நாகமங்கலம் க்ரியா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை தூய்மையே சேவை இயக்கம் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
திருச்சி கள விளம்பர அலுவலா் கே. தேவி பத்மநாபன் நோக்கவுரை நிகழ்த்தினாா். பள்ளி தாளாளா் கிறிஸ்டி சுபத்ரா, தூய்மை, சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்து எடுத்துரைத்தாா். இதில் திரளான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தூய்மையே சேவை இயக்கத்தின் கீழ் தூய்மைப் பணிகள் மேற்கொண்டு, நெகிழி குப்பைகள் அகற்றினா்.
முன்னதாக, பள்ளி முதல்வா் சாந்தி, ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். நிறைவில் திருச்சி கள விளம்பர உதவியாளா் எஸ். அருண்குமாா் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.