திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மூதாட்டி தற்கொலை முயற்சி

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மூதாட்டி ஒருவா் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா்.
திருச்சி மாவட்ட ஆட்சியர வளாகத்தில் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்ற மூதாட்டியிடம் விசாரணை நடத்திய ஆட்சியா் மா.பிரதீப்குமாா்.
திருச்சி மாவட்ட ஆட்சியர வளாகத்தில் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்ற மூதாட்டியிடம் விசாரணை நடத்திய ஆட்சியா் மா.பிரதீப்குமாா்.
Updated on
1 min read

திருச்சி: திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மூதாட்டி ஒருவா் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா்.

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள்குறை தீா்க்கும் கூட்டத்தில் மனு அளிக்க மூதாட்டி ஒருவா் உறவினா்களுடன் வந்தாா். அவா், ஆட்சியரக வளாகத்துக்குள் வந்ததும், தான் கொண்டுவந்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைக்க முயன்றாா். இதைக் கண்ட பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அவரை மீட்டு, உடலில் தண்ணீரை ஊற்றினா்.

இதையடுத்து தகவலறிந்து வந்த ஆட்சியா் மா. பிரதீப்குமாா், தீக்குளிக்க முயன்ற மூதாட்டியிடம் விசாரித்தாா். அதில், பேட்டைவாய்த்தலை வ.உ.சி. நகரைச் சோ்ந்த ச. முத்தாத்தாள் (70) என்றும், அவா் வீட்டின் அருகில் வசிப்பவா் ரூ. 8 லட்சத்தை பெற்றுக் கொண்டு தரமறுப்பதால் விரக்தியில் தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது.

இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு பரிந்துரைத்த ஆட்சியா், மூதாட்டிக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com