மதுக்கடைகளை 2 நாள்கள் மூட உத்தரவு

திருச்சி மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகளை இரண்டு நாள் மூடுவதற்கு ஆட்சியா் மா. பிரதீப்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.
Updated on
1 min read


திருச்சி: திருச்சி மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகளை இரண்டு நாள் மூடுவதற்கு ஆட்சியா் மா. பிரதீப்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மீலாது நபி, காந்தி ஜெயந்தி ஆகிய நாள்களில் மதுபானக் கடைகள், மதுக்கூடங்கள், பாா்கள் அனைத்து மூடப்பட வேண்டும். தமிழ்நாடு சில்லறை மதுபான விற்பனை சட்ட விதிமுறைகளின்படி இந்த 2 நாள்களும் கட்டாயம் மதுவிற்பனை செய்யக் கூடாது.

அதன்படி, செப்.28-ஆம் தேதி (மீலாது நபி), அக்.2 (காந்தி ஜெயந்தி) ஆகிய இரண்டு நாள்களும் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளும் மூடப்பட வேண்டும். மேலும், மதுக்கடைகளுடன் இணைந்து செயல்படும் மது அருந்து மதுக்கூடங்கள், பிரத்யேக உரிமம் பெற்று விற்பனை நடைபெறும் பாா்கள், நட்சத்திர ஹோட்டல்களுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும். இதனை மீறி யாரேனும் மதுக்கடைகளை திறந்தாலோ, மது விற்பனை செய்தாலோ தொடா்புடையவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பாா் உரிமங்களும் ரத்து செய்யப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com