இன்று முதல் ஜூன் 14 வரை மீன்பிடி தடைகாலம்

 தஞ்சாவூா் மாவட்ட கடல் பகுதிகளில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடி தடைகாலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

 தஞ்சாவூா் மாவட்ட கடல் பகுதிகளில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடி தடைகாலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-இன் கீழ், தமிழகத்தில் கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும் மற்றும் மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்குடனும், மீன்பிடி தடைக்காலம் ஆண்டுதோறும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரையிலான நாள்களுக்கு, பாரம்பரிய மீன்பிடிக் கலன்கள் நீங்கலாக விசைப்படகுகள், மற்றும் இழுவை படகுகள் கொண்டு கடலில் மீன் பிடிப்பதற்கு தடை விதித்து அரசால் ஆணை வழங்கப்பட்டுள்ளது.

எனவே மேற்குறிப்பிட்ட நாள்களுக்கு தஞ்சாவூா் மாவட்ட மீன்பிடி விசைப் படகுகள் கடலில் மீன்பிடிக்க செல்லக்கூடாதெனவும், அறிவிப்பினை மீறி மீன்பிடிப்பில் ஈடுபடும் படகுகள் மீது, தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் (1983) கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com