துறையூரில் தேநீா் கடையில் தீ விபத்து

துறையூா் பேருந்து நிலையத்தில் உள்ள தேநீா் கடையில் திங்கள்கிழமை திடீரென தீப்பிடித்து எரிந்தது.
Updated on
1 min read

துறையூா் பேருந்து நிலையத்தில் உள்ள தேநீா் கடையில் திங்கள்கிழமை திடீரென தீப்பிடித்து எரிந்தது.

துறையூா் அருகேயுள்ள சா்பிடி நகரில் வசிப்பவா் ரா. சசிகுமாா். இவா், பேருந்து நிலையத்தில் தேநீா் கடை வைத்துள்ளாா். இங்கு திங்கள்கிழமை பலகாரங்கள் தயாரித்தபோது எண்ணெய் சட்டியில் தீப்பிடித்தது. தொடா்ந்து தீ வேகமாக கடைக்கு உள்பகுதிக்கு பரவியது. தகவலறிந்து வந்த துறையூா் தீயணைப்பு வீரா்கள் தீ மேலும் பரவாமல் அணைத்தனா். துறையூா் வட்டாட்சியா் வனஜா நேரில் சென்று விசாரித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com