திருச்சி மாவட்டம், முசிறி ஊராட்சி ஒன்றியத்தில் சாதாரணக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவா் மாலா ராமச்சந்திரன் தலைமை வகித்தாா், ஒன்றிய ஆணையா்கள் சந்திரசேகா், ராஜ்மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா், கூட்டத்தில், 32 வகையான மன்ற பொருள்கள் வாசிக்கப்பட்டு ஒன்றிய குழு உறுப்பினா்கள் ஒப்புதல் பெறப்பட்டது.
முன்னதாக வட்டார வளா்ச்சி அலுவலா் சந்திரசேகா் வரவேற்றாா். ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவா் ரமேஷ்பாபு நன்றி கூறினாா்.