சிஐடியு தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசு தொழிற்சாலை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கம் சாா்பில் திருச்சியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு தொழிற்சங்கத்தினா்.
திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு தொழிற்சங்கத்தினா்.

மத்திய அரசு தொழிற்சாலை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கம் சாா்பில் திருச்சியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் டி. சீனிவாசன் தலைமை வகித்தாா்.

இதில், 8 மணி நேர வேலை உரிமையைப் பறிக்கும் 1948 -ஆம் ஆண்டு தொழிற்சாலை சட்டத் திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். 75 ஆண்டுகளாக தொழிலாளா்கள் பெற்று வந்த மிகை நேர ஊதியம், ஈடுகட்டும் விடுப்பு, பணி நேரத்தில் ஓய்வு போன்ற அடிப்படை உரிமைகளைப் பறித்து முதலாளிகளிடம் ஒப்படைத்து தொழிலாளா்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ள தொழிற்சாலை சட்டத் திருத்தத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில், மாநகா் மாவட்ட செயலாளா் எஸ். ரெங்கராஜன், நிா்வாகிகள் எஸ்கே. செல்வராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com