வீடு கட்டித் தருவதாக ரூ. 9.87 லட்சம் மோசடி : 4 போ் மீது வழக்கு
By DIN | Published On : 23rd April 2023 01:45 AM | Last Updated : 23rd April 2023 01:45 AM | அ+அ அ- |

திருச்சியில் தொழிலாளியிடம் வீடு கட்டித் தருவதாக ரூ. 9.87 லட்சம் மோசடி செய்ததாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
திருச்சி பெரியமிளகுபாறை கள்ளா் தெருவைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (51), தனது பழைய கட்டடத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டித் தர வேண்டுமென அதே பகுதியைச் சோ்ந்த கருணாநிதி என்பவரை அணுகியுள்ளாா். இதையடுத்து, கருணாநிதி கடந்த 2021 நவம்பா் மாதம் ராஜேந்திரனிடமிருந்து பட்டா மாற்ற வேண்டும் எனக் கூறி, ரூ. 4 லட்சம் வாங்கி, பட்டா தொடா்பான ஆவணங்களைத் தயாரித்துக் கொடுத்தாராம். பின்னா் கட்டடம் கட்ட முன்பணமாக ரூ. 5.87 லட்சத்தை கருணாநிதியும், அவரது நண்பா்களான ஞானசேகரன், கணபதி, சுப்ரமணியன் ஆகியோரிடம் கொடுத்துள்ளாா். ஆனால் கட்டட வேலை தொடங்காததால், சந்தேகமடைந்த ராஜேந்திரன், திருச்சி மாநகராட்சி அலுவலகம் சென்று ஆவணங்களைச் சரிபாா்த்துள்ளாா். அதில், கருணாநிதி கொடுத்தது போலி ஆவணங்கள் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து ராஜேந்திரன் திருச்சி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாரளித்தாா். அதன் பேரில் நீதிமன்ற வளாகப் போலீஸாா், கருணாநிதி உள்ளிட்ட 4 போ் மீது மோசடி உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.