திருச்சியில் 6 ஆம் வகுப்பு மாணவி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திருச்சி மாவட்டம், துவாக்குடி அருகேயுள்ள வாழவந்தான்கோட்டை குறிஞ்சி நகரைச் சோ்ந்தவா் முருகானந்தம். இவரது மகள் தேவகி (11). இவா், பெல் வளாகத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்தாா். திங்கள்கிழமை தேவகி பள்ளிக்குச் சென்று தோ்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்தாா். இதையடுத்து, முருகானந்தம், மகள் தேவகியை மட்டும் வீட்டில் விட்டுவிட்டு மனைவியுடன் வெளியில் சென்றாராம். மாலையில் திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டினுள் தேவகி தூக்கில் சடலமாக தொங்கியுள்ளாா்.
தகவலின் பேரில் துவாக்குடி போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.