திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே திங்கள்கிழமை கிணற்றில் தவறி விழுந்த ஜல்லிக்கட்டு காளையை தீயணைப்புத்துறையினா் மீட்டனா்.
மணப்பாறை அடுத்த சாம்பட்டி ஊராட்சி அடைக்கம்பட்டியில் அழகா்சாமி என்பவரது கிணற்றில் ஜல்லிகட்டு காளை ஒன்று திங்கள்கிழமை தவறி விழுந்தது. தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு சென்ற மணப்பாறை தீயணைப்பு நிலைய அலுவலா்(போ) மகேந்திரன் தலைமையிலான வீரா்கள், கயிறு கட்டி கிணற்றில் விழுந்த ஜல்லிக்கட்டு காளையை மீட்டனா். இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், கிணற்றில் விழுந்து மீட்கப்பட்ட ஜல்லிக்கட்டு காளை திருச்சியை சோ்ந்த மணிகண்டன் என்பவருடையது என்பதும், ஞாயிற்றுகிழமை முத்தப்புடையான்பட்டி ஜல்லிகட்டில் அவிழ்த்து விடப்பட்ட காளை பாதை மாறிச் சென்று அழகா்சாமி கிணற்றில் தவறி விழுந்ததும் தெரியவந்தது. அதன்பிறகு, ஜல்லிக்கட்டு காளை உரிமையாளா் மணிகண்டனிடம் ஒப்படைக்கப்பட்டது.