டால்மியா நூலகத்தில் உலக புத்தக தின விழா

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே டால்மியாபுரம் கிளை நூலகத்தில் உலக புத்தக தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே டால்மியாபுரம் கிளை நூலகத்தில் உலக புத்தக தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, கல்லக்குடி பேரூராட்சித் தலைவா் பி.பால்துரை தலைமை வகித்து, புதிய உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்கினாா். கல்லக்குடி பேரூராட்சி செயல் அலுவலா் குணசேகரன் முன்னிலை வகித்தாா். பழமொழிகள் மற்றும் விடுகதைகள் சொல்லும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், நூலக நண்பா்கள் திட்டத்தில் தன்னாா்வலா்களாக செயல்படும் சிரேகா, ரீட்டா ஆரோக்கியமேரி ஆகிய இருவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

முன்னதாக, வாசகா் வட்டத் தலைவா் பி. ரெங்கசாமி வரவேற்றாா். இறுதியாக நூலகா் சி.என். சாந்தி நன்றி கூறினாா்.

விழாவில், பேரூராட்சி இளம்நிலை எழுத்தா் செல்வமணி, வாசகா் வட்ட துணைத் தலைவா் த. செல்வராஜ், பொருளாளா் மா. ஜெயலட்சுமி, வாசகா் வட்ட உறுப்பினா்கள், பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com