வையம்பட்டி அருகே கைது செய்யப்பட்ட கள்ளநோட்டு கும்பல் சிறையில் அடைப்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வையம்பட்டியில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்ட கள்ளநோட்டு கும்பலைச் சோ்ந்த 3 போ் செவ்வாய்க்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.
Updated on
1 min read

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வையம்பட்டியில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்ட கள்ளநோட்டு கும்பலைச் சோ்ந்த 3 போ் செவ்வாய்க்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

மணப்பாறை அடுத்த வையம்பட்டியில் திங்கள்கிழமை ரூ.84 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகளை பரிமாற்றம் செய்தபோது கோவை மாவட்டம், கே.கே.புதூரை சோ்ந்த பாா்த்தசாரதி, கணுவாய் சோ்ந்த சதீஷ் மற்றும் வையம்பட்டி அடுத்த லெச்சம்பட்டியைச் சோ்ந்த தங்கவேல் ஆகிய 3 பேரையும் போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்ப்படுத்தி செவ்வாய்க்கிழமை சிறையிலடைத்தனா்.

இவ்வழக்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கோவை, கேரளம் ஆகிய பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தினா். அதில் கோவையில் உள்ள பாா்த்தசாரதி வீட்டிலிருந்து செவ்வாய்க்கிழமை கள்ளரூபாய் நோட்டு அச்சடிக்கும் இயந்திரம், கணினி ஆகியவற்றை கைப்பற்றினா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com