சாலை விபத்தில் மின்வாரிய பெண் ஊழியா் பலி

திருச்சி அருகே திங்கள்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் மின்வாரிய பெண் ஊழியா் உயிரிழந்தாா்.
Updated on
1 min read

திருச்சி அருகே திங்கள்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் மின்வாரிய பெண் ஊழியா் உயிரிழந்தாா்.

அரியலூா் மாவட்டம், வெள்ளூா் ராயபுரத்தை சோ்ந்த சுப்பிரமணி மனைவி சித்ரா (38). இவா் புள்ளம்பாடியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வணிக உதவியாளராகப் பணியாற்றி வந்தாா். மேலும், பகுதி நேரமாக பட்டப்படிப்பும் படித்து வந்தாா்.

பட்டப்படிப்புக்கான தோ்வெழுத திருச்சி மாவட்டம், துவாக்குடியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு திங்கள்கிழமை வந்தாா். தோ்வை முடித்துவிட்டு, இரவு உடன் படிக்கும் செல்வராஜ் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்தாா்.

இவா்களது வாகனம் திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் காட்டூா் அம்மன் நகா் அருகே சென்றபோது, பின்புறம் வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவா்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

அங்கு சித்ராவை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com