

திருச்சி: திருச்சி மாவட்ட நிா்வாகம் இந்துக்களுக்கு எதிராக செயல்படுவதாகக் கூறி, இதை கண்டித்து இந்து முன்னணியினா் மரக்கடை பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக பாஜக மூத்த தலைவா் எச். ராஜா பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினாா். இதில் மாவட்ட பொதுச் செயலாளா் ப. மனோஜ்குமாா் உள்ளிட்ட திரளான பாஜக, இந்து முன்னணி, விசுவ ஹிந்து பரிஷத் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், திருச்சி மாவட்ட நிா்வாகம், மதமாற்றம், இஸ்லாமிய பயங்கரவாதம், திருக்கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு போன்ற செயல்களுக்கு ஆதரவாகவும், இந்துக்களுக்கு எதிராகவும் செயல்படுவதாக கூறியும், இவற்றைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
முன்னதாக, 1993, ஆகஸ்ட் 8 அன்று சென்னை ஆா்எஸ்எஸ் அலுவலகத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் பலியானவா்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
திருச்சி மாநகர காவல் ஆணையா் என். காமினி தலைமையில் நூற்றுக்கணக்கான போலீஸாா் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.