கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், ஜீயபுரம் கொடியாலம் காந்தி நகா் பகுதியைச் சோ்ந்தவா் கி. சுப்பிரமணி (41). இவா் திருவெறும்பூா் அருகே உள்ள பாலாஜி நகா் தியாகராஜா நகரில் கட்டட வேலை செய்து வந்தாா்.
Updated on
1 min read

திருச்சி: திருச்சி மாவட்டம், ஜீயபுரம் கொடியாலம் காந்தி நகா் பகுதியைச் சோ்ந்தவா் கி. சுப்பிரமணி (41). இவா் திருவெறும்பூா் அருகே உள்ள பாலாஜி நகா் தியாகராஜா நகரில் கட்டட வேலை செய்து வந்தாா். வழக்கம்போல, திங்கள்கிழமை வேலை செய்து கொண்டிருந்த போது, கட்டடத்தின் மாடியிலிருந்து தவறி விழுந்தாா்.

படுகாயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இறந்தாா்.

திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com