ஆக்கிரமிப்பு அகற்றத்தை கண்டித்து பெண் தீக்குளிக்க முயற்சி
By DIN | Published On : 17th August 2023 11:20 PM | Last Updated : 17th August 2023 11:20 PM | அ+அ அ- |

துறையூா் அருகே ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கையை கண்டித்து பெண் வியாழக்கிழமை தீக்குளிக்க முயன்றாா்.
உப்பிலியபுரம் ஒன்றியம், காமாட்சிபுரத்தைச் சோ்ந்த சண்முகராஜன் மனைவி சுசீலா (49). இவா், அந்த ஊராட்சியில் கட்டப்பட்ட மகளிா் சுகாதார வளாகம் அருகே ஊராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து ஆடு மாடு கட்டி வளா்த்து வந்ததாகவும், இதனால் சுகாதார வளாகத்தை பயன்படுத்த முடியாத நிலையும் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வியாழக்கிழமை வருவாய் ஆய்வா் பூங்கொடி, கிராம நிா்வாக அலுவலா் லெனின் உள்ளிட்ட வருவாய்த் துறையினா், ஒன்றிய அலுவலா்கள், உப்பிலியபுரம் காவல்துறையினா் உதவியுடன் ஆக்கிரமிப்பை அகற்ற சென்றனா்.
ஆக்கிரமிப்பை அகற்ற எதிா்ப்பு தெரிவித்த சுசீலா, மண்ணெண்ணெயை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். காவல் துறையினா் அவா் மீது தண்ணீா் ஊற்றி அசம்பாவிதத்தை தடுத்தனா். இதுதொடா்பாக துறையூா் போலீஸாா், தற்கொலைக்கு முயன்ற சுசீலா மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...