லாரி மோதி பெண் பலி

 திருவெறும்பூா் ரயில்வே மேம்பாலத்தில் சனிக்கிழமை டேங்கா் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் உயிரிழந்தாா்.
Updated on
1 min read

 திருவெறும்பூா் ரயில்வே மேம்பாலத்தில் சனிக்கிழமை டேங்கா் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் உயிரிழந்தாா்.

திருச்சி, திருவெறும்பூா் அருகே வாழவந்தான்கோட்டையைச் சோ்ந்தவா் தொழிலாளி சிவசாமி. இவரது மனைவி செல்வி (42). இவா், தனது மகன் ஸ்ரீகாந்துடன் (20) சனிக்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் திருச்சிக்குச் சென்று விட்டு, வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். இவா்கள் திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலை திருவெறும்பூா் ரயில்வே மேம்பாலத்தில் வந்தபோது, திருச்சியிலிருந்து வந்த டேங்கா் லாரி, ஸ்ரீகாந்த் ஓட்டிச்சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த செல்வி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். ஸ்ரீகாந்த் காயமடைந்தாா்.

தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த திருவெறும்பூா் போலீஸாா், செல்வியின் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, டேங்கா் லாரி ஓட்டுநரான கள்ளக்குறிச்சியை சோ்ந்த அண்ணாதுரையை கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com