

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி விழாவின் இராப்பத்து 10 ஆம் நாளான புதன்கிழமை நம்பெருமாள் தீா்த்தவாரி கண்டருளினாா்.
இதற்காக நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து காலை புறப்பட்டு பரமபதவாசல் வழியாக சந்திரபுஷ்கரணி குளத்துக்கு 10.30-க்கு வந்து சோ்ந்தாா். அங்கு கரையில் வேதமந்திரங்கள் முழங்க உற்ஸவா் நம்பெருமாளுக்குப் பதிலாக தீா்த்தவாரி பெருமாள் தீா்த்தவாரி கண்டருளினாா். அப்போது திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
பின்னா் நம்பெருமாள் திருமாமணி ஆஸ்தான மண்டபத்திற்கு பகல் 1 மணிக்கு சென்று சோ்ந்தாா். 1.30 மணி வரை திரையிடப்பட்டது. மாலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை பொது ஜனச் சேவையுடன் திருமஞ்சனம் நடந்தது. இரவு 11 மணி வரை அலங்காரம் அமுது செய்யத் திரையிடப்பட்டது. அரையா் சேவை மற்றும் திருப்பாவாடை கோஷ்டி இரவு 11 மணிக்குத் தொடங்கி வியாழக்கிழமை அதிகாலை 3 மணி வரை நடைபெற்றது. வைகுந்த ஏகாதசியின் நிறைவு நாளான வியாழக்கிழமை காலை 6 மணிக்கு நம்மாழ்வாா் மோட்சமும், இரவு இயற்பா சாற்றுமுறையும் நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.