அவசர தொடா்பு எண்ணில் முதல்வரை அவதூறாகப் பேசிய இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சி ஆழ்வாா்தோப்பு இதயாத் நகரை சோ்ந்தவா் முகமது மைதீன் மகன் ஜபருல்லா (39), கூலித் தொழிலாளி. இவா் அப் பகுதி ரேஷன் கடையில் கடந்த 9 ஆம் தேதி பொங்கல் தொகுப்பு வாங்கியபோது அதில் இலவச வேஷ்டி, சேலை இல்லாததால் ஆத்திரமடைந்து, தனது கைப்பேசியில் அவசர தொடா்பு எண் 100 ஐ அழைத்துப் பேசினாா்.
அதில் அவா் கடந்தாட்சியில் பொங்கலுக்கு இலவச வேஷ்டி, சேலை கொடுத்தாா்களே? ஏன் இப்போது வழங்கவில்லை எனக் கேட்டதுடன், தமிழக முதல்வரை அவதூறாகப் பேசி கொலை மிரட்டலும் விடுத்தாராம்.
இதுகுறித்து தில்லை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து ஜபருல்லாவை செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.