

திருச்சி உறையூா் காசிவிளங்கி மீன் சந்தை முன்பு சாலையோர சில்லறை விற்பனை செய்யக்கூடாது என மீன் வியாபாரிகளுக்கு திருச்சி மேயா் மு. அன்பழகன் அறிவுறுத்தல்கள் வழங்கினாா்.
உறையூா் காசிவிளங்கி மீன் சந்தையை, திருச்சி மாநகராட்சி மேயா் மு. அன்பழகன் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த அவா், மேலும் கூறியது:
மொத்த மீன் வியாபாரத்துக்கான உறையூா் காசிவிளங்கி மீன் சந்தை பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து சாலையோரம் கடைகளை அமைத்து சில்லறை வியாபாரம் செய்யக்கூடாது. வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கடைகளை அமைத்து வியாபாரம் செய்ய வேண்டும். இல்லையெனில் வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தாா். மீன் சந்தையின் முன்பு வாடிக்கையாளா்கள் வாகனங்களை நிறுத்தி, பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு செய்யக் கூடாது. மீன் சந்தையின் பின்புறம் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும். இல்லையெனில் மாநகராட்சி அதிகாரிகள் மூலம் நேரக் கணக்கில் வாடகை வசூலித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வாகன உரிமையாளா்களிடம் அறிவுறுத்தினாா். மீன் சந்தையை தினமும் தூய்மையாகப் பராமரித்திட வேண்டும் எனவும் சுகாதார ஆய்வாளா்களுக்கு உத்தரவிட்டாா்.
ஆய்வின்போது, கோட்டத் தலைவா் விஜயலட்சுமி கண்ணன், உதவி ஆணையா் சதீஷ்குமாா், உதவி செயற்பொறியாளா் பாலசுப்ரமணியன், மாமன்ற உறுப்பினா் பங்கஜம், மாநகராட்சி சுகாதாரப் பணியாளா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.