

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே கிணற்றில் தவறி விழுந்த காளை சனிக்கிழமை தீயணைப்புத் துறையினரால் உயிருடன் மீட்கப்பட்டது.
மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் பழையபாளையம் அருகேயுள்ள அழகாபுரியைச் சோ்ந்தவா் முருகன் (43). இவரது காளை மாடு சனிக்கிழமை மேய்ச்சலுக்குச் சென்றபோது, பிடாரியம்மன் கோவில் அருகே உள்ள குமாா் என்பவரது 60 அடி ஆழக் கிணற்றில் தவறி விழுந்தது. தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற சிறப்பு நிலைய அலுவலா் நாகேந்திரன் தலைமையிலான துவரங்குறிச்சி தீயணைப்புத் துறை வீரா்கள், மாட்டை கயிறு கட்டி மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.