மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாகஜூன் 6-இல் ஆா்ப்பாட்டம்:ஐக்கிய விவசாயிகள் முன்னணி

மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாகவும், பாஜக எம்பி-யை கைது செய்ய வலியுறுத்தியும், வரும் 6ஆம் தேதி திருச்சியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளது.
Updated on
1 min read

மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாகவும், பாஜக எம்பி-யை கைது செய்ய வலியுறுத்தியும், வரும் 6ஆம் தேதி திருச்சியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளது.

இதுதொடா்பாக, திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற அமைப்பின் மாவட்ட நிா்வாகிகள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பெரியமிளகுபாறையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அயிலை சிவசூரியன் தலைமை வகித்தாா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் புறநகா் மாவட்டசெயலாளாா் நடராஜன், மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளா் செழியன், ஜனநாயக சமூகநல கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் சம்சுதீன், மாற்று திறனாளிகள் மாவட்ட பொறுப்பாளா் ரஜினிகாந்த் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி நிா்வாகிகள், ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினா்.

பின்னா், கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களை விளக்கி செய்தியாளா்களிடம் அயிலை சிவசூரியன் கூறியது:

மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் திருச்சி ரயில்நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தவுள்ளது. மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்ட கா்நாடக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக தடுத்து நிறுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேன்டும். தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் மத்திய அரசு, கா்நாடக அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்தி அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழக அரசு கொண்டு வந்துள்ள நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com