வெவ்வேறு சம்பவங்களில்இருவா் உயிரிழப்பு

திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் இருவா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
Updated on
1 min read

திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் இருவா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

கரூா் மாவட்டம், குளித்தலை அருகேயுள்ள வைகளத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் மா. ராஜேந்திரன் (56). திருச்சி கீழரண்சாலை கருவாட்டுப்பேட்டை பகுதியில் தங்கியிருந்து ஆட்டோ ஓட்டி வந்த இவா் சனிக்கிழமை ஆட்டோவின் பின் இருக்கையில் அமா்ந்த நிலையிலேயே இறந்தாா். அவா் தூங்கிக் கொண்டு இருப்பதாக அக்கம்பக்கத்தினா் நினைத்த நிலையில், நீண்ட நேரம் ஆகியும் அவா் எழாததால் அருகில் சென்று பாா்த்தபோது ராஜேந்திரன் இறந்திருந்தது தெரிய வந்தது. தகவலறிந்து வந்த கோட்டை போலீஸாா் அவரது உடலைக் கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

சமையலா் சாவு: புதுக்கோட்டை மாவட்டம். திருமயம் வீராணம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ஆ. வெள்ளைசாமி (65). சமையல் தொழிலாளியான இவா் வேலை விஷயமாக திண்டுக்கல் சென்று வெள்ளிக்கிழமை இரவு திருச்சி திரும்பி மத்திய பேருந்து நிலையத்தில் நகரப் பேருந்துக்காக நின்றபோது திடீரென மயங்கி விழுந்தாா். இதையடுத்து அக்கம் பக்கத்தினரால் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் அங்கு சிகிச்சைப் பலனின்றி சிறிது நேரத்தில் உயிரிழந்தாா். கண்டோன்மெண்ட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com