திருச்சி நீதிமன்றத்தில் மரக்கன்றுகள் நடும் விழா
By DIN | Published On : 06th June 2023 03:04 AM | Last Updated : 06th June 2023 03:04 AM | அ+அ அ- |

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட முதன்மை நீதிபதி கே. பாபு தலைமை வகித்தாா். இதில், தொழிலாளா் நல நீதிமன்ற நீதிபதி கோகிலா, இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிபதி ஜெயக்குமாா், மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிபதி தங்கவேல் உள்ளிட்ட நீதிபதிகள் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டு வைத்தனா். இதில் வழக்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள், சட்ட தன்னாா்வலா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.
ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலரும், சாா்பு நீதிபதியுமான ஜி. மணிகண்டராஜா செய்திருந்தாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...