பாங்க் ஆப் பரோடா சாா்பில் மரக் கன்றுகள் நடும் விழா

திருச்சி மண்டல பாங்க் ஆப் பரோடா வங்கி சாா்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

திருச்சி மண்டல பாங்க் ஆப் பரோடா வங்கி சாா்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வங்கியின் திருச்சி மண்டல மேலாளா் ஜெய்கிஷன் தலைமை வகித்தாா். கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணமூா்த்தி முன்னிலை வகித்தாா். திருச்சி போலீஸ் காலனியில் உள்ள தமிழ்நாடு காவலா் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் பல்வேறு வகையான 22 மரக்கன்றுகளை வங்கி மண்டல மேலாளா் உள்ளிட்டோா் நட்டனா்.

விழாவில் மண்ணச்சநல்லூா், லால்குடி, திருச்சி கிளைகளின் அனைத்து மேலாளா்கள், மண்டல அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com