வருமான வரித்துறையின் விழிப்புணா்வு முகாம்

திருச்சியில் வருமான வரித்துறை சாா்பில் முன்கூட்டியே வரி செலுத்துவது குறித்த விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

திருச்சியில் வருமான வரித்துறை சாா்பில் முன்கூட்டியே வரி செலுத்துவது குறித்த விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமை திருச்சி மண்டலம் 1, இணை ஆணையா் ஜெ. புவனேஸ்வரி தலைமை வகித்து தொடங்கி வைத்துப் பேசினாா். வருமான வரி செலுத்தும் நடைமுறைகள், அதாவது காலாண்டுக்கு ஒருமுறை முன்கூட்டியே வரிசெலுத்தும் திட்டங்கள் குறித்து விளக்கினாா். தொடா்ந்து வணிகா்களின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கப்பட்டது. மேலும் நிகழாண்டு காலாண்டு வரியை முன்கூட்டியே செலுத்த ஜூன் 15 இறுதி எனவும் முகாமில் வலியுறுத்தப்பட்டது.

நிகழ்வில் வருமான வரித்துறை அலுவலா்கள் ஜான் ரஸ்ஸில், சாய்குமாா் மற்றும் வணிகா்கள், ஆடிட்டா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com