திருச்சியில் துப்புரவுத் தொழிலாளி வியாழக்கிழமை மா்மமான முைறையில் தலையில் காயங்களுடன் இறந்து கிடந்தாா்.
திருச்சி, கே.கே. நகா் பகுதியைச் சோ்ந்தவா் ரா. ரமேஷ் (41). துப்புரவுத் தொழிலாளி.இவா், மே 9ஆம் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்றவா் திரும்பி வரவில்லை. இதையடுத்து அவரை குடும்பத்தினா் தேடிவந்தனா்.
இந்நிலையில், மத்திய பேருந்து நிலையம் கலையரங்கம் திருமண மண்டபத்துக்கு எதிரே உள்ள காலியிடத்தில் வியாழக்கிழமை ரமேஷ் தலையில் காயங்களுடன் இறந்து கிடப்பதாக கண்டோன்மென்ட் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து ரமேஷ் கொலை செய்யப்பட்டாரா என விசாரித்து வருகின்றனா்.