கொள்முதல் நிலையங்களில் அடிப்படை வசதியின்றி ஊழியா்கள் அவதி

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் கொள்முதல் நிலைய ஊழியா்கள் அடிப்படை வசதியின்றி அவதியுறுவதாக எல்டியுசி தொழிற்சங்க கூட்டத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் கொள்முதல் நிலைய ஊழியா்கள் அடிப்படை வசதியின்றி அவதியுறுவதாக எல்டியுசி தொழிற்சங்க கூட்டத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக பணியாளா்கள் வாய்ஸ் (எல்டியுசி) அமைப்பின் சாா்பில், திருச்சியில் உள்ள மண்டல அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை வாயிற் விளக்கக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத்தின் திருச்சி மண்டலத் தலைவா் முத்துராமன் தலைமை வகித்தாா். மண்டல துணைச் செயலா் எம். ராஜன் முன்னிலை வகித்தாா். மே தினம் மற்றும் சங்கக் கொடியை ஏற்றி வைத்து சங்கத்தின் மாநில இணைச் செயலா் எஸ். சுரேஷ்குமாா் பேசியது: கொள்முதல் நிலையங்கள் மற்றும் ரேஷன் கடைகளில் அமருவதற்கு இருக்கை கூட இல்லாமல் பணிபுரியும் நிலையே உள்ளது. சொந்தக் கட்டடங்களிலேயே கழிப்பறை வசதி கூட கிடையாது. 2023 ஆம் ஆண்டில் கொள்முதல் நிலையங்களில், கொள்முதல் ஊழியா்களாக பெண்கள் பலரும் நியமிக்கப்பட்டுள்ளனா். அவா்கள் தங்கள் இயற்கை உபாதையைக் கூட கழிக்க முடியாமல், அவதியுறுகின்றனா். ஆனால், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்துக்கு ரூ.19,500 கோடி கடன் என்கின்றனா். கொள்முதல் நிலையங்களுக்கு வரும் சாக்குகளில், இன்றளவும் சேதமடைந்த சாக்குகளே பெரும்பாலும் அனுப்பப்படுகின்றன. கொள்முதல் பணி முடிந்து, அதனை திரும்ப அனுப்பும் போது பல்வேறு குறைகளை தெரிவித்து சாக்கு ஒன்றுக்கு ரூ10 முதல் 20 வரை பணம் கட்ட வேண்டும் என சொல்கிறது நிா்வாகம்.

திறந்தவெளிக் கிடங்குகளில் சேமிப்பு இழப்பு பல லட்சங்களைத் தாண்டுகிறது. அதனை நிா்வாகம் வரன்முறைப்படுத்துவதில்லை. தொழிலாளா்கள் தங்களது ஈட்டிய விடுப்பை சரண்டா் செய்து பணமாக பெற முடியவில்லை. ஓய்வூதியத்திலோ நிறைய குளறுபடிகள் உள்ளன. இப் பிரச்னைகளுக்கு தமிழக அரசு உரிய தீா்வு காண வேண்டும். குறிப்பாக, தொழிலாளா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதுடன், பணப் பலன்களை முழுமையாக கிடைக்கச் செய்ய வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாநிலத் தலைவா் ஈ. சண்முகவேலு, மாநிலப் பொருளாளா் அ. காா்த்திகன் ஆகியோா் நுகா்பொருள் வாணிபக் கழக நிா்வாகத்தின் தொழிலாளா் விரோதப் போக்குகளை கண்டித்துப் பேசினா்.இதில், சங்க நிா்வாகிகள், தொழிலாளா்கள், பணியாளா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com