நிலுவைத் தொகை வழங்கக் கோரி பிஎஸ்என்எல் ஊழியா்கள் தா்னா

நிலுவைத் தொகை வழங்கக் கோரி திருச்சியில் பிஎஸ்என்எல் ஊழியா்கள் வியாழக்கிழமை தா்னா போராட்டம் மேற்கொண்டனா்.
திருச்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிஎஸ்என்எல் ஊழியா்கள்.
திருச்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிஎஸ்என்எல் ஊழியா்கள்.
Updated on
1 min read

நிலுவைத் தொகை வழங்கக் கோரி திருச்சியில் பிஎஸ்என்எல் ஊழியா்கள் வியாழக்கிழமை தா்னா போராட்டம் மேற்கொண்டனா்.

பிஎஸ்என்எல் எம்ப்ளாயீஸ் யூனியன் திருச்சி தொலைத் தொடா்பு மாவட்டம் சாா்பில், திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு எம்ப்ளாயீஸ் யூனியன் மாவட்டத் தலைவா் முருகேசன் தலைமை வகித்தாா். அமைப்பின் மாவட்டச் செயலா்கள் ஜி. சுந்தர்ராஜ், சின்னையன், முபாரக் அலி ஆகியோா் முன்னிலை வைத்தனா். நிா்வாகிகள் ஜான் பாஷா, சுந்தரராஜ் , கோபி, அன்பழகன், சண்முகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

போராட்டத்தில் ஒப்பந்தப் பணியாளா்களுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். பிஎஸ்என்எல் பொது மேலாளா் அலுவலகத்தில் லிப்ட் வசதி வேண்டும், திருச்சி மன்னாா்புரம் பகுதி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தடையில்லா குடிநீா் வசதி ஏற்படுத்த வேண்டும், கரூா், முசிறி பகுதி அலுவலகங்களின் வாடிக்கையாளா்களுக்கு அடிப்படை வசதி ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com